Followers

Tuesday, 13 October 2020

பூமித்தாய்


       பெற்றத்தாய்  கருவறை 
                சிலமாதகாலம் 
         பெறாததாய்   கருவறை 
                எங்கள்  வாழ்நாள்  காலம்.

         படிப்படியாக  பண்பட்ட  நெஞ்சத்தை 
    உன்னில்  படிக்க  வைத்தாய் 
    பல்லுயிர்கள்  பசியாற 
    பாரம்  சுமந்தாள்.

    ஏறு  போல்  ஏற்றம்  தந்து 
    ஏணியானாள் 
     அன்னை  போல்  சீற்றம் (நிலநடுக்கம் )
        கொண்டு  பின்  அரவணைக்கிறாள்.

    ஆணிவேராய்   நின்று 
       அகிலம்   ஆள்கிறாள் 
     அளப்பரியா  தொண்டினை 
       நித்தம்  செய்கிறாள்.

      அனுஷணமும்   நில்லாது 
          தன்னை  சுற்றுகிறாள் 
     தாயே!  சற்றே  உறக்கம்  கொள் 
          நின்னையே   சரண்ணடைய 
                 தவம்  கொள்கிறேன்.
      

No comments:

Post a Comment