பெற்றத்தாய் கருவறை
சிலமாதகாலம்
பெறாததாய் கருவறை
எங்கள் வாழ்நாள் காலம்.
படிப்படியாக பண்பட்ட நெஞ்சத்தை
உன்னில் படிக்க வைத்தாய்
பல்லுயிர்கள் பசியாற
பாரம் சுமந்தாள்.
ஏறு போல் ஏற்றம் தந்து
ஏணியானாள்
அன்னை போல் சீற்றம் (நிலநடுக்கம் )
கொண்டு பின் அரவணைக்கிறாள்.
ஆணிவேராய் நின்று
அகிலம் ஆள்கிறாள்
அளப்பரியா தொண்டினை
நித்தம் செய்கிறாள்.
அனுஷணமும் நில்லாது
தன்னை சுற்றுகிறாள்
தாயே! சற்றே உறக்கம் கொள்
நின்னையே சரண்ணடைய
தவம் கொள்கிறேன்.
No comments:
Post a Comment