இறைவன் கொடுத்த
வரம் நீ!
இறைவனை காண்கின்ற
வரம் நீ!
இருண்ட உலகில்
இருந்த நீ!
இவ்வுலகில் உயிராய்
வந்த நீ!
இயற்கையே ஆராதிக்கும்
அதிசயம் நீ!
இன்பத்தை அளிக்கும்
ஊற்று நீ!
இன்றைய உலகின்
இருதயம் நீ!
இதயம் காக்கும்
மருந்து நீ!
இத்தொடரின் முதன்
முதலும் நீ!
இலக்கிய பெருங்கதை
ஆரம்பம் நீ!
இச்சஷணமே உருவாகும்
பிறப்பு நீ!
இலக்கண விதியும்
விளக்கமும் நீ!
இளந்தளிரே! இசையமுதே!
இவைகளின் மொத்த
உருவகம் நீயே!.
No comments:
Post a Comment