Followers

Thursday, 14 January 2021

அறுவடைத்திருநாள்











அறுவடைத்திருநாள் 
அகிலம் போற்றும்  நன்னாள் 
பருவத்தே  பயிர்  செய்ய 
பக்குவமாய்  நாற்றிட்டு 
திங்கள்  காலத்தில் 
தீர்வு காண
மாரிச்செல்வத்தை எதிர்பார்த்து 
ஏறுபூட்டி  உழுது 
ஏத்தம்  இட்டு 
உழுதவன்  உயிராய் நினைத்து 
காத்திருக்க.... 

பசும்புல்  பட்டாடைய் 
பாந்தமாய்   தெரிய 
பதமாய்  பயிர்  வளர்ந்து 
ஓங்கி  நிற்கும் நெற்பயிர்கள் 
ஒவ்வொன்றாய்  உறுதி  செய்யும் 
உழவனின்  ஊதியத்தை... 

ஒற்றுமையாய் கூடி  நின்று 
குடும்பமாய்  மகிழ்ந்திட 
தைத்திருநாளில்  இன்பம்  பெருகி 
ஆதவனைக்  கும்பிட்டு 
அண்டம் பசியாற 
படியளக்கும்  பொன்னாள் 
எங்கள்  வாழ்வின்  திருநாள். 

பொங்கல்  திருநாள்  வாழ்த்துக்கள் 




































No comments:

Post a Comment